Friday, April 8, 2011

துரோகம்!!

துரோகம் என்றவுடன்


நினைவுக்கு வந்துவிடுகின்றன

சில பெயர்கள் சட்டென்று

யூதாசை போல....



முப்பது வெள்ளி காசுகள் தவிர

அவன் துரோகத்திற்கான காரணம்

நாம் எவரும் அறியோம் ....



ஆனால் பெயர் கேட்டவுடன்

உமிழ்கிறோம் துவேசத்தையும்

வன்மத்தையும் ஒருசேர ....



புரூடஸ் கோஸ்லிங் கோட்சே

என நீளும் பட்டியலில்

ஒரு நாள் நீயோ நானோ இடம் பெறலாம்



அன்று ஒரு வேலை நமக்கு தெரியலாம்

பெரும் துரோகத்திற்கு பின் ஒளிந்திருக்கும்

மென் சோகமும்

சொல்லொன்னா துயரும் .......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home