Saturday, September 1, 2007

நினைவின் சுவடுகள்...

மழை பெய்து கொண்டிருந்த அந்திம பொழுதில்
நீயும் நானும் பிரிவதேன்று
பரஸ்பரம் முடிவு செய்தோம்

பின்னொரு நாள் எதேச்சையாக
தாம்பரம்-கடற்கரை மின்வண்டியில்
நாம் சந்திக்கும் படி நேர்ந்தது

என் குடும்பம் பற்றி நீயும்
உன் குடும்பம் பற்றி நானும்
மேம்போக்காய் விசாரித்து கொண்டோம்

விடை பெரும் தருவாயில்
நீ என்னை பார்த்து கேட்டாய்
என்னை நினைப்பது உண்டா என்று ?????


விடை கூறமால் வந்து விட்டேன்.
உனக்கு எப்படி புரிய வைப்பது
காயங்களின் வலி வேண்டுமானால் மறையலாம்
அதன் வடுக்கள் மறையாது என்பதை .....


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home