Thursday, April 28, 2011

அகங்காரத்தின் காரணம்

அகங்காரத்தின் காரணம் கேட்டாய்


பதில் கூறுவதற்கு முன்

கேள்விகள் அடுக்கினாய் ....



புத்தகங்கள் பல வாசிப்பதாலா

நண்பர்கள் நிறைய இருப்பதாலா

அறிவு கொஞ்சம் அதிகம் இருப்பதாலா



கடவுளை ஏற்க்க மறுப்பதாலா

கவிதைகள் சில எழுதுவதாலா

ஏன் ? ஏன் ? ஏன் ?



உனக்கு எப்படி புரிய வைப்பேன் ?

நீ கேட்டவை எதுவும் இல்லையென்றாலும்

அகங்காரமாய் தான் இருப்பேன்

எனக்கு நான் உண்மையாய் இருக்கும் வரை என்பதை .......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home