Saturday, September 1, 2007

மாற்றங்கள் ....

உன்னை முதல் முறை பார்த்த பொழுது
எனக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கவில்லை

உன்னிடம் பேசிய பொழுது
என் கால்கள் பின்னி கோலம் போட வில்லை

நீ சிரித்த பொழுது முத்துக்கள் உதிரவில்லை
என் தொண்டைக்குள் எந்த பந்தும் சிக்கவில்லை

ஆனால் நீ சென்று வெகு நேரமாகியும்
அங்கேயே நின்று கொண்டிருந்தேன்


பிரமை பிடித்தவன் போல.......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home