Thursday, August 4, 2011

படித்ததில் பிடித்தது !!

தினசரி வழக்கமாகிவிட்டது


தபால்பெட்டியைத்

திறந்துபார்த்துவிட்டு

வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே

எந்தக் கடிதமும் இல்லாத

ஏமாற்றம்.

இன்று எப்படியோ

என்று பார்க்கையில்

அசைவற்று இருந்தது

ஒரு சின்னஞ்சிறு

இறகு மட்டும்

எந்தப் பறவைஎழுதியிருக்கும்

இந்தக் கடிதத்தை.



'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து


நன்றி : கல்யாண்ஜி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home