Tuesday, September 20, 2011

மழை.....

மழையை வெறுப்பதற்கு


நிறைய காரணங்கள் இருக்கின்றன

எனக்கு !!!!



மழை பெய்து கொண்டிருந்த ஓர் இரவில் தான்

உயிர் தோழனின் தற்கொலை செய்தி

வந்து சேர்ந்தது ....



செல்லமாய் வளர்த்த ஜூலி

இறந்த பொழுது வீட்டிற்கு உள்ளேயும் வெளியும்

மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது .....



பெரு மழைக்கு பிறகான விடியலில் தான் தெரிந்தது

ரகசியமாய் நேசித்த ராஜி அக்காவும்

ஆதர்சமாய் பார்த்த பரமு அண்ணனும்

ஊர் விட்டு ஓடி போனது .....


மழை தூரி கொண்டிருந்த மதிய வேலையில் தான்

நீயும் நானும் பிரிந்து விடுவதென

பரஸ்பரம் முடிவு செய்தோம் .....



இப்படி காரணங்கள் நிறைய இருக்கின்றன

மழையை வெறுப்பதற்கு...

ஆனாலும் மழையின் முதல் துளி

என் மீது விழும் அந்த கணத்தில்

குழைந்து கரைந்து போகிறேன்

மண்ணென !!!!!!!



.

1 Comments:

Blogger சமுத்ரா said...

arumai

October 14, 2011 at 2:24 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home