Monday, August 15, 2011

படித்ததில் பிடித்தது !!!

படித்ததில் பிடித்தது !!!






சிறகிலிருந்து பிரிந்த

ஒற்றை இறகு

காற்றின் முடிவற்ற பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச்செல்கிறது

-பிரமிள்



சைக்களில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்து திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை


--கல்யாண்ஜி



ஒரு கட்டு வெற்றிலை

பாக்கு சுண்ணாம்பு புகையிலை

வாய் கழுவ நீர்

பிளாஸ்க் நிறை ஐஸ்

ஒரு புட்டி பிராந்தி

வத்திப்பெட்டி சிகரெட்

சாம்பல் தட்டு

பேசுவதற்கு நீ

நண்பா

இந்தச் சாவிலும்

ஒரு சுகம் உண்டு.


--நகுலன்






அந்திக்கருக்கலில்

இந்தத்திசை தவறிய

பெண்பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை புரியவில்லை.


--கலாப்ரியா





0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home