களம் கண்ட போராளி அவன்
கை ஒன்றையும் கால் ஒன்றையும்
குடும்பத்தை மொத்தமாகவும் இழந்திருந்தான் ....
உரையாடலின் ஊடே
அவனிடம் கேட்டேன்
அடுத்து என்ன என்ற கேள்வியை ...
பெரியதாய் சிரித்து என்னிடம் கூறினான்
ஊருக்கு சென்றவுடன்
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று .....
மௌனமாய் கரைந்தன சில நொடிகள்
என்னிடம் இருந்து விடை பெற்றான்
மௌனத்தின் அர்த்தம் உணர்ந்தவனாய் ...
விந்தி விந்தி நடந்தவன்
பின் ஏதோ நினைத்தவனாய்
திரும்பி வந்து என்னிடம் கூறினான் ..
திருமணம் நடந்தால்
ஆண் புலியோ பெண் புலியோ
பிறக்கும் சார் !!!!!
கை ஒன்றையும் கால் ஒன்றையும்
குடும்பத்தை மொத்தமாகவும் இழந்திருந்தான் ....
உரையாடலின் ஊடே
அவனிடம் கேட்டேன்
அடுத்து என்ன என்ற கேள்வியை ...
பெரியதாய் சிரித்து என்னிடம் கூறினான்
ஊருக்கு சென்றவுடன்
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று .....
மௌனமாய் கரைந்தன சில நொடிகள்
என்னிடம் இருந்து விடை பெற்றான்
மௌனத்தின் அர்த்தம் உணர்ந்தவனாய் ...
விந்தி விந்தி நடந்தவன்
பின் ஏதோ நினைத்தவனாய்
திரும்பி வந்து என்னிடம் கூறினான் ..
திருமணம் நடந்தால்
ஆண் புலியோ பெண் புலியோ
பிறக்கும் சார் !!!!!