முன்பெல்லாம் மாதத்திற்கு
ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான்
வரும் வீட்டிலிருந்து கடுதாசி ..........
மூன்று வேலையும் சாப்பிடு
தவறாமல் கோயிலுக்கு போ
அன்பை கொட்டி இருப்பாள் அம்மா
கண்ணீருக்கு இடையில் .......
அதிகம் ஊர் சுற்ற வேண்டாம்
படிப்பில் கவனம் செலுத்தவும்
அன்பை மறைத்து கண்டிப்பை
காட்டி இருப்பார் அப்பா .......
கடிதத்தின் ஓரம் கட்டம் கட்டி
சண்டை போடா ஆள் இல்லாத குறையையும்
புது உதடு சாயத்திற்கான கோரிக்கையும்
வைத்து இருப்பாள் தங்கை .....
இப்போதெல்லாம் வாரத்திற்கு
இரு முறையவாது வந்துவிடுகிறது
மின் அஞ்சல்கள்.
அனால் அதில் தான்
உணர முடிவதில்லை
அப்பா தங்கையின் கை எழுத்தும்
அம்மாவின் கண்ணீர் துளிகளையும் .......