Tuesday, July 6, 2010

இன்று நாளை என
தள்ளிக்கொண்டே போகின்றது
மனத்தாங்கல் கொண்ட நண்பனிடமான உரையாடல் ......

இன்று நாளை என
தள்ளிக்கொண்டே போகின்றது
செய்து முடிக்க படாத வேண்டுதல் ஒன்று .......

இன்று நாளை என
தள்ளிக்கொண்டே போகின்றது
யாரும் அற்ற வனத்திற்கான பயணம் ......

இன்று நாளை என
தள்ளிக்கொண்டே போகின்றது
கேட்கப் படாத மன்னிப்புகள் ......

சில விஷயங்களை எண்ணுவதற்கும்
அவை செயலாக மாறும் இடை வெளியில்
படர விட்டு கொண்டிருகிறது காலம்
தன் மந்தகாச புன்னகையை..........